(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கட்சியை விட்டு வெளியேரியவர்களை நாட்டை கட்டியெழுப்பும் செயற்திட்டத்திற்கு ஒன்றினையுமாறு விசேட வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதன்படி, சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று ஐதேகவில் இணைந்து சஜித்தை ஆதரிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அவரிடம் வினவிய போது இன்று மாலை கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்சியை விட்டுவெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.