சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ரணிலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதியினை கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று வழங்கி வைத்தார்.

கண்டியில் வைத்து குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்ட நிலையில் அதன் முதல் பிரதியை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.