சஜித்தின் பலத்தை கூட்டும் கூட்டமைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கூறியுள்ளார்.