(FASTNEWS|COLOMBO) -தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மெற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை அமைச்சரவை சாரா அமைச்சர் அஜித் பெரேரா மேற்கொள்ள உள்ளார்.
சிறிகொத்த தலைமையகத்திற்கு அருகாமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுடன் மேடையொன்றை அமைத்து இவ்வாறு சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.