இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் ரங்க திசாநயக்க இன்று(19) உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் சஜின் வாஸ் மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த வேளை, அந்நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களால், 833 மில்லியன் ரூபா நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் குறித்த இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.