இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று(29) நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை கங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ள கடற்படையினர், இன்று(30) அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்ததுள்ளது.