சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் ஒருவர் கைது..

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 14 லட்சம் பெறுமதியுடைய ஒரு தொகை சிகரட்டுடன் இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கை வந்த 46 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் 14 லட்சத்து 98 ஆயிரம் பெறுமதியான 29 ஆயிரத்து 960 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.