அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
முறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.