சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முயற்சித்த 21 பேர், கொழும்பில் இருந்து 117 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்,
அவர்களில் 19 ஆண்களும், 3 பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது