சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல்…

வெலிகம – மிரிஸ்ஸ கடற்பரப்பில் சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடல் வள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.கே பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனுடன், தெஹிவளை – கல்கிசை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்பரப்பில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களும் அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####