(FASTNEWS|COLOMBO) – முல்லைத்தீவு, கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை கடற்படையினர் நேற்று(15) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் 510 அடி நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை முல்லைத்தீவு மீன்வள உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.