(ஃபாஸ்ட் நியூஸ் | மன்னார்) – சட்ட விரோதமான முறையில் படகு மூலம், தமிழகத்துக்குள் நுழைய முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது, கம்பி பாடு கடற்கரையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது செய்யப்பட்ட நபர், மன்னாரை சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.