சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோவை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 39 மில்லியன் ரூபா பணத்தினை முறைகேடாக பயன்படுத்தி கட்சி அலுவலகங்களுக்கு கெரம் அட்டை மற்றும் டாம் அட்டைகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இவர் கடந்த 06ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma