உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.