இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா தனது முன்னாள் காதலியுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயசூர்யாவுக்கும், மொடலும் மற்றும் நடிகையுமான மலிகா ஸ்ரீசேனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகத்தான் ஜெயசூர்யா, தனது இரண்டாவது மனைவியான சந்திரா டி சில்வாவை விவாகரத்து செய்தார் என்ற தகவல்கள் வெளியானது.
மலிகா ஸ்ரீசேனாவும், ஜெயசூர்யாவும் கோயிலில் இரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மலிகா ஸ்ரீசேனா ஒரு தொழிலதிபரை மணந்து, படங்களில் நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் இலங்கையின் அரசியல் அதிகாரி ஒருவர் கிளப்பிய பிரச்சினை காரணமாக இந்த ஆபாச வீடியோவை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதை தன்னை பழிவாங்கவே ஜெயசூர்யா வெளியிட்டதாகவும் அவரது முன்னாள் காதலி, மலிகா ஸ்ரீசேனா விளக்கம் அளித்துள்ளார்.