இந்திய பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைமையில் இருந்து அவுஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தினை சேதப்படுத்திய சம்பவம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பாரிய சிக்கலாக உள்ள நிலையில் தான் அணியின் தலைமையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவரது தலைமைப் பதவிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி இதுவரை எவரினதும் பெயர்களை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rishma