சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் இளைய புதல்வி மரணம்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா (40) ஜயசூரிய நேற்று மாலை காலமானார்.

இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்து அந்நாட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர், தனது 40 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவனியின் இறுதி சடங்கு பிரித்தானியாவில் இடம்பெறக்கூடும் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.