மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் பற்றிய பாராளுமன்ற விவாதம் நாளை(06) நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(05) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
குறித்த விவாதம் நடைபெறும் நேரம் மற்றும் அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் காலம் என்பன குறித்து அங்கு தீர்மானிக்கப்பட உள்ளது.