சபாநாயகர் தலைமையில் நாளை(18) கட்சித் தலைவர்கள் கூட்டம்…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை(18) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்று மேற்கொள்ளப்படும் என, பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர ஃபெனான்டோ தெரிவித்துள்ளார்.