சபாநாயகர் பதவியிலிருந்து கரு இராஜினாமா?; பொது வேட்பாளர்?

தற்போது கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரிய இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

என்றாலும், பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் உயர்மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.