ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இன்று(31) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று(30) பாராளுமன்றில் இடம்பெற்ற விஷேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகரின் அழைப்பின் பேரில் பாராளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று(30) சந்திப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.