சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில்..

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பலாங்கொடையில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேரணி பம்பகின்ன தொடக்கம் பலாங்கொடை நோக்கி சென்றுள்ளதாக  தெரியவருகின்றது.

அசாதாரண ரீதியில் பல்கலை மாணவர்கள் 8 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமை, மாணவர்களின் நலன்கள் மட்டுப்படுத்தப்பட்டமை போன்ற விடயங்களை முன்வைத்தே இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்தப் பேரணி காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது