சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி திறப்பு…

(FASTNEWS|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி. கித்சிறி தெரிவித்துள்ளார்.