சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21 ஆம் திகதி மீண்டும் திறப்பு…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக, எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கி கற்கும் மாணவர்களை நாளை(20) காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கு இடையில் சமூகமளிக்குமாறு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது மாணவர் பதிவுப் புத்தகத்தை கொண்டுவருமாறு பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.