சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநரான நிலூகா ஏக்கநாயக்க அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ளதால் குறித்த மாகாணத்தின் பதில் ஆளுநராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக வடமாகாண ஆளுநர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.