சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள பாடசாலைகள் மற்றும் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அடங்கிய 52 பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்படும் என அம்மாகாணத்தின் முதலமைச்சர் மஹீபால ஹேரத் அறிவித்துள்ளார்.
கேகாலை முதலமைச்சர் செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் வரையறைகளுக்கு ஏற்ப இன்று முதல் மூடப்படவுள்ள பாடசாலைகளின் பெயர் விபரம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.
