சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோ மொரொட்டுவை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.