சமிஞ்ஞை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்தத் தீர்மானம்…

புகையிரத மார்க்கத்தில் காட்டுயானைகள் குறுக்கிடுவது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்ஞை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களினால் இந்த சமிஞ்ஞை கட்டமைப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வாரத்துக்குள் இதனை ஒரு மாதிரித்திட்டமாக அமுல்படுத்தவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

புகையிரத மார்க்கங்களில் காட்டுயானைகள் பிரவேசிப்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும், தெரிவித்துள்ளார்.