சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில்  சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில்  குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.