சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில்…

(FASTNEWS|COLOMBO) சமூக வலைத்தளங்களின் ஊடாக போலியான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து அடையாளம் காண்பதற்காக, பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.