சமூக வலைத்தளங்கள் மீதான தடை காரணமாக அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று(13) ஜப்பானிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றுக்கு நாளொன்றுக்கு 200 மில்லியனுக்கு அதிகமான வருமான அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.