ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரையில் சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்…

சமூக வலைத்தளங்களின் தற்காலிகத் தடை குறித்து தொலைத் தொடர்பு அமைச்சிற்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிகத் தடையினை நீக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக குறித்த அமைச்சு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரையில் தமது ஆணைக்குழுவினால் எந்தவொரு தீர்மானத்தினையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் தொலைத் தொடர்பு அமைச்சிற்கு குறித்த ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

#rishma