சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றுக்கு அடிமைப் பட்டு உலகெங்கிலும் 400 மில்லியன் மக்கள் அவதிபடுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவது, போதை பொருட்கள், புகைத்தல் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாகுவதை விடவும் மிகவும் பாரதூரமான விளைவுகை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு சுட்டி காட்டுகிறது.
சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு பதற்றம், மனச்சோர்வு, மனோநோய், உடல் சோர்வு, தூக்கமின்மை, தலைவலி, ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுவதோடு அவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து இருப்பதாகவும் பிரிட்டிஷ் பத்திரிகையான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.