சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதை காரணம் காட்டி, சமையல் எரிவாயு நிறுவனங்கள், விலையை அதிகரிக்க கோரி வாழ்க்கைச் செலவுகள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.