(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கொலன்னாவ, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டியிலுள்ள பேக்கரியில் இந்த எரிவாயு விற்பனை நடைபெற்றுள்ளதுடன், அங்கிருந்துசுமார் 40 எரிவாயு சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த இடம் எரிவாயு விற்பனை செய்யும் ஏஜென்சி கூட இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.