சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியில் ஆர்ப்பாட்டம்.

சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட்டத் தொழி­லா­ளர்­கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் கடந்த சில நாட்களாக வீதியை மறித்து, டயர்களை எரித்தும்,  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முதலாளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்படாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்ச்சி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழிலாளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள்,  தொழிற்சங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில்  இன்று காலை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.