சம்பள பிரச்சினை – முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்தை…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று(26) முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிலாளர் சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(25) பிரதமரை சந்தித்தனர்.

குறித்த இந்த சந்திப்பின் போதே இன்று(26) பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் அறிவித்தார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்;.