சம்பிக்க விவகாரம் – பூஜித்திடம் வாக்குமூலம் பெற அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.