சரண குணவர்தனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை கைது செய்யுமாறு இன்று(30) கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபை தலைவராக இருக்கும் காலத்தில் நெருங்கிய ஒருவரின் வாகனங்களை குறித்த சபைக்கு உள்வாங்கி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma