சரத்குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு..

முன்னாள் மீன்பிடிதுறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(09) அவரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, இந்த மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அராங்க நிதியினை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது