சரத் வீரவன்ச பிணையில் விடுதலை.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று(16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.