(FASTNEWS | COLOMBO) – இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இடையிலான சர்ச்சையினை தீர்க்கும் வரையில் தான் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(02) அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சார சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனம் ஒன்று பிறிதோர் அரச நிறுவனமொன்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.