சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளோருக்கு மேலும் கால அவகாசம்..

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.

இதன்படி இம்மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(rizmira)