சவுதி அரேபியா, ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை இரத்து செய்தது..

(FASTNEWS| SAUDI ARABIA)- அல்கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை இரத்துச் செய்ய சவுதி அரேபியா தீர்மானிததுள்ளது.

இது குறித்து சவுதி அரேபிய உள்நாட்டு அலுவலகள் அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதுடைய ஹம்சா பின்லேடன் அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக செயற்படுகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.