இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக அண்மையில் பதவியேற்றுள்ள அப்துல் நாசர் அல் ஹார்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை நேற்று(04) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சௌத் அவர்களின் விஷேட செய்தியொன்றையும் இதன்போது அவர், அமைச்சரிடம் கையளித்தார்.
-ஊடகப்பிரிவு-



