சஷி வீரவன்சவின் இராஜதந்திர கடவுச்சீட்டு குறித்த வழக்கு ஒத்திவைப்பு

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ஸவின் மனைவியான சசி வீரவன்ஸவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கிற்கு தேவையான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை நீதிமன்றத்திற்கு கிடைக்காமையினாலேயே குறித்த இந்த வழக்கை ஒத்திவைப்பதாக கொழும்பு நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.