(FASTGOSSIP |COLOMBO) – கடந்த ஏப்ரல் மாத 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான முஹம்மத் சஹ்ரானின் மனைவியான அப்துல் காதற் பாத்திமா காதியா என்பவர் நேற்று(15) கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசேட வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த இரகசிய வாக்குமூலம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.