(FASTNEWS|COLOMBO) சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவரான, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று(21) நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் மகள் மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகள் அண்மையில் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது