சஹ்ரான் உடன் ஆயுத பயிற்சி பெற்ற மூவர் கைது.

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்ல-தனாகம , கந்துருவெல்ல, வரகாபொல-துல்கிரிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.