சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயங்கரவாதி சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றனர்.